உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு 2 மகன்களுடன் தீ குளிக்க முயன்ற பெண்

Published On 2022-06-20 09:44 GMT   |   Update On 2022-06-20 09:44 GMT
  • கடலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு 2 மகன்களுடன் பெண் தீ குளிக்க முயன்றார்.
  • எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர்.

கடலூர்: 

கடலூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி காவேரி. இவர் தனது 2 மகன்களுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பெட்ரோல் கேனை கைப்பற்றினர். காவேரியின் கையில் மனு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் கடந்த ஆண்டு இறந்து போனார். அதற்கு முன்பு எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனது கணவர் இறந்த பின்பும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனது 2 மகன்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். இதற்கு எனது உறவினர் ஒருவரும் உடந்தையாக உள்ளார். எனவே எனக்கும், எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News