உள்ளூர் செய்திகள்

சித்தமல்லி ந.சோமசுந்தரம்.

வலங்கைமான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி சோமசுந்தரம் மரணம்

Published On 2022-12-08 09:04 GMT   |   Update On 2022-12-08 09:04 GMT
  • வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செயலாளாற்றினார்.
  • சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இவர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும் தி.மு.க. மாவட்ட அவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சோம.நடேசமணி, சோம.செந்தமிழ்செல்வன் என்ற இரண்டு மகன்களும் மற்றும் ராணி சேகர் என்ற மகளும் உள்ளனர்.

இதில் சோம.செந்தமிழ்செல்வன் நீடாமங்கலம் பெருந்தலை வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News