உள்ளூர் செய்திகள்

முன்னாள் டி.ஜி.பி. ரவி பெயரில் போலி முகநூல் பக்கம்- போலீசில் புகார்

Published On 2023-07-13 09:05 GMT   |   Update On 2023-07-13 09:05 GMT
  • போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது.
  • சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை:

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், தாம்பரம் போலீஸ் கமிஷனருமான ரவியின் பெயரில் போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

இதற்கு முன்னரும் இதே போன்று போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டு பலர் மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News