உள்ளூர் செய்திகள்
செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்தில் வனத்துறையினர் ஆய்வு
- பழங்குடி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது போஸ்பாரா பகுதியில் இருந்து செம்பக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் சுமாா் 2.5 தூரம் வனபகுதியில் உள்ள மண் சாலையை சீரமைப்பது, அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கூடம் அமைக்க போதுமான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.ஆய்வின்போது தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு மற்றும் வன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.