உள்ளூர் செய்திகள்

காதுகுத்து நிகழ்ச்சிக்கு சீர்வரிசை செய்யாததால் இரு தரப்பினர் மோதல்-10 பேர் மீது வழக்கு

Published On 2022-06-12 10:20 GMT   |   Update On 2022-06-12 10:20 GMT
  • கடலூரில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு சீர்வரிசை செய்யாததால் இரு தரப்பினர் மோதல்-10 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
  • கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை,

கடலூர் : கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை என சின்னதாய் பல பேரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ஜமுனா தனது தங்கை புவனாவுடன் சின்னதாய் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, புவனாவை கல்லால் தாக்கி மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் அம்மு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஜமுனா மற்றும் அம்மு கொடுத்த புகாரின் பேரில் தனித்தனியாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

Similar News