உள்ளூர் செய்திகள்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published On 2023-01-06 10:46 GMT   |   Update On 2023-01-06 10:46 GMT
  • தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
  • பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பல்லடம் :

ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.

பெரும்பாலும் சாலையோரமாகவும்,நெடுஞ்சாலைகளை கடந்தும் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான தனி நடைபாதை திண்டுக்கல் முதல் பழனி வரை இருப்பதை போல் திருப்பூர் - பழனி,கோவை - பழனி ஆகிய ரோடுகளில் தனி நடைபாதை அமைக்க வேண்டும்.

மேலும் பக்தர்கள் தங்குவதற்கான ஒய்வு இடங்கள்,நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்கப்பட வேண்டும்.பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாதாரண கட்டணத்தில் அதிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News