உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 09:50 GMT   |   Update On 2023-02-07 09:50 GMT
  • சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும்.
  • ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு சத்துணவு சங்கம் சார்பில்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி வட்டார தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு வரவேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க

வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை

மற்றும் உணவு மானி யத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க

வேண்டும். காலிப்பணியி டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சத வீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News