உள்ளூர் செய்திகள்

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட போது எடுத்த படம்.

பல்லடம் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2022-06-27 12:01 GMT   |   Update On 2022-06-27 12:01 GMT
  • டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • திருப்பூர் மாவட்ட கலெக்டரின் வினீத் உத்தரவு.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

வீட்டிற்குச் சென்று பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குறைபாடுடன் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுடன் வினியோகம் செய்யப்பட்ட மற்ற பிஸ்கெட் பாக்கெட்களை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டது.டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பிஸ்கட்டை விநியோகித்த விநியோகஸ்தரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாவட்ட கலெக்டரின் வினீத் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை, அறிவுறுத்தலின்படி பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News