உள்ளூர் செய்திகள்

ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் கேன் வாட்டர் விநியோகம்- உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

Published On 2023-05-19 09:26 GMT   |   Update On 2023-05-19 09:26 GMT
  • எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
  • 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

சென்னை:

எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து, சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்துதிருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.

19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

உரிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் கேன் வாட்டர் சப்ளை செய்து வந்த கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட குடிநீர் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.

Tags:    

Similar News