உள்ளூர் செய்திகள்

வைத்தியநாத சுவாமி கோவில்  கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2022-08-05 21:24 GMT   |   Update On 2022-08-05 21:24 GMT
  • ஆற்றின் கரையை தொட்டுக் கொண்டு வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
  • கோவில் மூலவர் சன்னதியில் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுகிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் கடந்த 2 நாட்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரையை தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் உள் பிரகாரத்திலும், தண்ணீர் புகுந்தது. வாசலிலும் நீர் சுவற்றில் இடையே உள்ள துளைகள் போன்றவற்றின் வழியாக தண்ணீர் புகுந்து வருகிறது.

மேலும் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தால், கோவில் மூலவர் சன்னதியிலும் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின. கோவில் சுவரில் உள்ள ஒரு துளையில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News