உள்ளூர் செய்திகள்

கொடியேற்று விழா

Published On 2023-07-10 07:24 GMT   |   Update On 2023-07-10 07:24 GMT
  • விழாவிற்கு பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.
  • பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சேக்காண்டஅள்ளியில் வன்னியர் சங்க கொடி ஏற்று விழா நடை பெற்றது.

விழாவிற்கு கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத் தலைவரும், பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவருமான எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.

மொரப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகம்மாள் மாது, அஜந்தா சண்முகம் ,ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் மதிவாணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாராயணன், அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் துரை, பூமி சமுத்திரம், அருள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News