உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து- போக்குவரத்து நெரிசல்

Published On 2025-09-25 12:34 IST   |   Update On 2025-09-25 12:35:00 IST
  • விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது.
  • வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலைக்கு சென்று வருகின்றனர்.

தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.

வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.


 

அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News