உள்ளூர் செய்திகள்

மீன் பிடிக்கும் பணி நடைபெற்ற காட்சி. 

டவுன் நயினார்குளத்தில் மீன் பிடிக்கும் பணி

Published On 2022-06-06 09:33 GMT   |   Update On 2022-06-06 09:33 GMT
  • மீன்கள் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தது.
  • மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

நெல்லை:

நெல்லை மாநகரின் மையப்பகுதியில் டவுன் நயினார்குளம் அமைந்துள்ளது. மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்ட நீரினால் இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. இதனால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

தற்போது கடுமையான வெயிலின் காரணமாக குளத்தில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டதால் அதில் வளர்ந்திருந்த மீன்களை பிடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை நேரத்தில் மீன்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு மீனும் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தது. அவற்றை மொத்த வியாபாரிகள் அங்கிருந்து வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News