உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.

உரிய ஆவணங்களுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-06-15 09:17 GMT   |   Update On 2022-06-15 09:17 GMT
மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தவறாது எடுத்து செல்லவும்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

மீன் பிடிதடைக்காலம் முடிந்து மீன்பிடிப்புக்கு செல்லும் அனைத்து மீனவர்களும் உயிர்காப்பு சாதனங்கள், மீனவர் அடையாள அட்டை, மீன்பிடி–கலனின் பதிவுசான்று, மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தவறாது எடுத்து செல்லவும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் 2020 அரசாணை எண்.எம்.எஸ்.40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை (4) நாள் 25.03.2000-ன் மற்றும் வழிகாட்டுலின்படி செயல்படவும் அனைத்து மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமை யாளர்கள் கேட்டுக்ெகாள்ள ப்படுகிறார்கள்.

தவறும் பட்சத்தில் தமிழ்நாடு கடல்மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தி–ன்படி உரிய நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும். மேலும் மீன்வளம் மற்றும் மீன்வர்நலத்துறை வாயிலாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்து ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News