புகார் அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.
பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சியில் நிதி கையாடல்மக்கள் நீதி மய்யம் புகார்
- தலைவர் ஊராட்சி நிதியில் இருந்து குடிநீர் பைப் லைன் உடைந்ததை சரிசெய்ததாக கணக்கு காண்பித்து ரூ.13.8 லட்சத்தை கையாடல் செய்துள்ளார்.
- நோட்டீஸ் தொடர்பாக கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சி நிதியில் தலைவர் கையாடல் செய்திருப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில் ஏப்ரல் 2020 முதல் அக்டோபர் 2021 வரை தலைவர் கமலவேணி, ஊராட்சி நிதியில் இருந்து குடிநீர் பைப் லைன் உடைந்ததை சரிசெய்ததாக கணக்கு காண்பித்து ரூ.13.8 லட்சத்தை கையாடல் செய்துள்ளார்.
இதே போல், சுகாதார பொருட்கள் வாங்கியதாக ரூ.4.58 லட்சம், குடிநீர் பைப் போன்ற பொருட்கள் வாங்கியதாக ரூ.8.17 லட்சம், மோட்டார் பழுது பார்த்ததாக ரூ.1.87 லட்சம் கையாடல் செய்து ள்ளார்.
இது தொடர்பாக, தணிக்கை அதிகாரி ஆய்வு செய்தார். இதில் பணம் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் சிவகாமி ஆகியோர் மீது ஊராட்சிகள் சட்டப்பிரிவின் படி நடவடிக்கை எடுப்ப தற்கு 2023 பிப்.8-ம் தேதி இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது.
ஆனால், நோட்டீஸ் தொடர்பாக கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.