உள்ளூர் செய்திகள்

கொடியேற்றத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2023-07-31 04:13 GMT   |   Update On 2023-07-31 04:13 GMT
  • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள்.
  • இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் புகழ் பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. பாரிஸ் நகரத்தில் உள்ள மாதா சிலை நிறுவப்பட்ட அதே நாளில் கொடைக்கானலிலும் அதே உருவத்திலான சிலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்று சிறப்பாகும்.

சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மறை மாவட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலி முடிந்தவுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 14 நாட்கள் நவநாள் முடிந்தவுடன் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் சலேத் அன்னை திருத்தேர் பவனி நடைபெறும். இதனை முன்னிட்டு நடந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News