உள்ளூர் செய்திகள்

ரெயிலில் வந்த உர மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க லாரியில் ஏற்றப்பட்டது.

குருவைப்பட்ட சாகுபடிக்கு தேவையான உரங்கள் சரக்கு ரெயில் மூலம் விருத்தாசலம் வந்தது

Published On 2023-06-12 06:53 GMT   |   Update On 2023-06-12 06:53 GMT
  • மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன.
  • 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

கடலூர்:

தமிழகத்தில் நடைபெற இருக்கும் குருவைப் பட்ட சாகுபடிக்காக மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. பொட்டாஷ் 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் , 253 மெட்ரிக் டன் கலப்பு உரங்களும் சரக்கு ெரயில் மூலம் வந்து இறக்கப்பட்டது. பின்னர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

Tags:    

Similar News