உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- மன உளைச்சலில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜே.கே.பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவர்களது மகள் சுகன்யாவை தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
மகன் கார்த்திக்கிற்கு கவுரி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்க ளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி சம்பவத்தன்று வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.