உள்ளூர் செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்ற தந்தை-மகன் மாயம்

Published On 2023-07-04 15:11 IST   |   Update On 2023-07-04 15:11:00 IST
  • அவரை கேரளாவில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ஞானவேல் அடிக்கடி அழைத்து செல்வார்.
  • கேரளாவிற்கு சென்ற 2 பேரும் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி திருவண்ணா மலை ரோடு கணபதி நகரைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது50). பழவியாபாரியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சூர்யா (25), இன்பகணபதி (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் இன்பகணபதிக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரை கேரளாவில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ஞானவேல் அடிக்கடி அழைத்து செல்வார்.

இதேபோல் கடந்த 22-ந் தேதி ஞானவேல் தனது மகன் இன்ப கணபதியை கேரளா விற்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் கேரளாவிற்கு சென்ற 2 பேரும் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன ஞானவேலின் மனைவி கணவனையும், மகனையும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சூர்யா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்ற தந்தையும், தனது சகோதர னையும் காணவில்லை என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News