உள்ளூர் செய்திகள்

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை கைது

Published On 2023-07-01 09:05 GMT   |   Update On 2023-07-01 09:05 GMT
  • அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
  • வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவர், சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும் சிறுமியை அவர் வளர்ப்பு தந்தைபோல் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதையடுத்து அவரது தாயார் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News