உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட

Published On 2023-05-18 09:56 GMT   |   Update On 2023-05-18 09:56 GMT
  • நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
  • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

வேதாரண்யம்:

நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News