உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-07-07 15:09 IST   |   Update On 2023-07-07 15:09:00 IST
  • விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • கொள்முதல் செய்து அதற்கான சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேட்டியளித்த அவர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொள்முதல் செய்து அதற்கான சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். எண்ணை வித்துக்களை மாநில அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடையில் விற்பனை செய்ய வேண்டும். கல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Tags:    

Similar News