உள்ளூர் செய்திகள்

ஊமத்தன் ஏரியின் வடிகால் வாரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2023-04-17 09:16 GMT   |   Update On 2023-04-17 09:16 GMT
  • சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
  • தண்ணீர் செல்வது தடைபட்டு மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது.

இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது.

இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.

மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News