உள்ளூர் செய்திகள்
உடன்குடி வட்டார பகுதியில் அதிக மகசூல் பெற முருங்கையை வெட்டி விட்டு வளர்க்கும் விவசாயிகள்
- உடன்குடி வட்டாரத்தில் உள்ள செம்மணல் பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பு, மெய்யூர், கந்தபுரம், நேசபுரம். தாங்கையூர் போன்ற செம்மணல் பகுதியில் தற்போது முழு மூச்சுடன் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பனை, தென்னை மரத்தோட்டங்களில் முருங்கையை ஊடுபயிராக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதும் மழை காலம் என்பதால் முதிர்ந்த முருங்கையில் உள்ள கிளைகளை வெட்டி விட்டு வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர். பல இடங்களில் புதியதாக முருங்கை கம்புகளை நடவு செய்துள்ளனர்.