செழித்து வளர்ந்த தீவனப்புல்.
திண்டுக்கல் அருகே தீவனப்புல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
- தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை சாகுபடி செய்து வருகின்றனர்.
- மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தீவனப்புல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு உரங்கள் இயற்கையான முறையில் பயன்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் தீவனப்புல்லை உண்ணும் மாடுகளிடம் நல்ல சுகாதாரமான சத்தான பால் அதிகமாக கிடைக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் தீவனப் புல்லை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.