உள்ளூர் செய்திகள்

நாகையில் விவசாயி தற்கொலை

Published On 2022-11-19 09:53 GMT   |   Update On 2022-11-19 09:53 GMT
  • நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
  • வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.

இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News