உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த விவசாயி சாவு

Published On 2023-07-31 08:41 GMT   |   Update On 2023-07-31 08:41 GMT
  • முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
  • சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது63). விவசாயியான இவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் முனியப்பன் மனைவியை மாடு முட்டியதில் காயம் அடைந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முனியப்பன் மகன் குமார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News