உள்ளூர் செய்திகள்
- குப்புராஜ் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்தாக கூறப்படுகிறது.
- போலீசார் குப்புராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமோட்டூர் கோவிந்தன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 48). இவர் குருபரப்பள்ளி ராமபுரம் பகுதியில் தனியார் மெடிக்கல் கடை நடத்த வருகிறார்.
இவர் அந்த பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேப்பனப்பள்ளி மருத்துவ துறை அலுவலர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் குருபரபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் குப்புராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.