உள்ளூர் செய்திகள்

சுரண்டையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- டீக்கடைக்காரர் பலி

Published On 2022-09-10 14:33 IST   |   Update On 2022-09-10 14:33:00 IST
  • சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது நடந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சுரண்டை:

வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளக்கால் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 54). இவர் வீ.கே.புதூரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் சண்முகசுந்தரிக்கு வீ.கே.புதூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி உள்ளது. சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(20) என்ற வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளும், பேச்சிமுத்துவின் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News