உள்ளூர் செய்திகள்

மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானம்

Published On 2022-06-05 09:58 GMT   |   Update On 2022-06-05 09:58 GMT
  • கடையநல்லூரில் மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
  • உடல் நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார்.

கடையநல்லூர்:

கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் கணேசனின் சகோதரி சண்முகத்தாய் (வயது 70 ).

இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணமடைந்தார். அவரது கண்களை கடையநல்லூர் அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் சஞ்சீவி,சுப்பாராயலு, மற்றும் அரிமா உறுப்பினர்களின் முயற்சியால் தானமாக பெற்று நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை கடையநல்லூர் அரிமா சங்கத்தின் சார்பில் 23 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது என அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News