உள்ளூர் செய்திகள்

சாலையோரத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

செம்பட்டி அருகே விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்

Published On 2023-04-15 12:31 IST   |   Update On 2023-04-15 12:31:00 IST
  • இந்த மரம் அடர்ந்து, விரிந்து இருந்ததால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்தது.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் இருந்து, எஸ்.கோடங்கிபட்டி செல்லும் சாலை ஓரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பல ஆயிரம் மதிப்புள்ள வாகை மரம் இருந்தது. இந்த மரம் அடர்ந்து, விரிந்து இருந்ததால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்தது. கோடை காலங்களில் இந்த மரத்தின் அடியில்தான் அந்த வழியில் செல்பவர்கள் ஓய்வெடுத்து செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலர் அந்த மரத்தை வெட்டி கடத்தி சென்று விட்டனர். அரசு அனுமதி இல்லாமல் மர்ம நபர்களால் அந்த மரம் வெட்டப்பட்டுள்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சீவல்சரகு கிராம நிர்வாக அலுவலர் பானு, வருவாய் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூர் தாசில்தார் சரவணனிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தாசில்தார் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News