ஊட்டியில் வள்ளலார் இயற்றிய நூல்கள் கண்காட்சி
- வள்ளலார் இயற்றிய நூல்களின் கண்காட்சியை ரமணா சக்தி சுரேஷ் திறந்து வைத்தார்.
- திருவருட்பா பாடலை சரவணன் பாடினார்.
ஊட்டி,
வள்ளலாரின் 200-வது பிறந்த தின விழா நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பாவேந்தர் இலக்கிய பேரவை மற்றும் தமிழ் இயக்கம் வாசகர் வட்டம் சார்பாக தியான நிகழ்வுடன் நடந்தது. இதில் புலவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.மாவட்ட நூலகர் ரவி முன்னிலை வகித்தார்.வள்ளலார் இயற்றிய நூல்களின் கண்காட்சியை ரமணா சக்தி சுரேஷ் திறந்து வைத்தார்.இதில் சமூக சேவகி உஷா பிராங்கிளின், தமிழ் இயக்கம் செயலர் கீதா குணாளன், வக்கீல் நஜுமா பாய் நசீர், மலைச்சாரல் கவி, மன்ற தலைவர் பெள்ளி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி தஸ்தகீர், நூலக வாசகர் வட்ட தலைவி அமுதவல்லி, மத நல்லிணக்க குழு தலைவர் கிருஷ்ணன், தமிழ் கலை இலக்கியப் பேரவை கூடலூர் தமிழ்ச்செல்வன், மூத்த கவிஞர் சோலூர் கணேசன், கவிஞர் நீலமலை ஜேபி, கவிதாயினி மணி அர்ஜுனன், மதிமாறன் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருவருட்பா பாடலை சரவணன் பாடிட, நூலகர் ராஜசேகர் நன்றி கூறினார்.