உள்ளூர் செய்திகள்

வாழைத்தோட்டம் அரசு பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

Published On 2023-07-24 15:56 IST   |   Update On 2023-07-24 15:56:00 IST
  • விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
  • விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மன்றம் தொடக்க விழா நடை பெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார். சமூகவியல் ஆசிரியை மஞ்சுளா தொல்லியல் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி பேசினார்.

இந்த விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிரியகள் உமாசங்கரி, செந்தில், நீலாம்பிகை மற்றும் பலர் பேசினார்கள். முடிவில் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News