உள்ளூர் செய்திகள்

சீருடை பணியாளர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-30 10:29 GMT   |   Update On 2023-08-30 10:29 GMT
  • முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன.
  • மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் 2023ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி வாயிலாக வருகிற செப்டம்பர் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News