உள்ளூர் செய்திகள்
- வேலைமுடிந்து தனசேகர் ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
- அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள பொன்னான்டா வலசு பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மகன் தனசேகர் (25). தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் இரவு வேலைமுடிந்து ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. இது தெரியாமல் தனசேகர் இருந்து வந்தார்.
பின்னர் பெருந்துறை அரசுஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான் தனக்கு பாம்பு கடித்தது என்பது தனசேகருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாகஇறந்தார்.
இது குறித்து காஞ்சி கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.