உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து தொழிலாளி பரிதாப சாவு

Published On 2023-04-08 08:14 GMT   |   Update On 2023-04-08 08:14 GMT
  • ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
  • வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). இவரது மனைவி தேவயானி. ராஜா மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் சம்ப வத்தன்று சங்கராபாளையம் கிராமத்தில் உள்ள தப்பக்காரன் தோட்டம் தாமரை செல்வி கரும்பு தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தபோது ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ராஜா கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News