உள்ளூர் செய்திகள்

விஷப்பூச்சி கடித்து பெண் பலி

Published On 2023-10-17 15:12 IST   |   Update On 2023-10-17 15:12:00 IST
  • வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.
  • வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு, அக். 17-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நிகமம் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. லோடு வாகன டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா (38). விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவ த்தன்று புது வடவள்ளி பட்டவர்த்தி அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தட்டி அறுக்கும் வேலையில் வெண்ணிலா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.

உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News