உள்ளூர் செய்திகள்

வரட்டுபள்ளம் அணை 5-வது முறையாக நிரம்பியது

Published On 2022-09-02 08:19 GMT   |   Update On 2022-09-02 08:19 GMT
  • வரட்டுபள்ளம் அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.
  • இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்தியூர்:

அந்தியூர் வரட்டுபள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 33 கன அடி கொள்ளளவு கொண்ட அணை நடப்பாண்டு 4 முறை நிரம்பி வழிந்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வரட்டுப்பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.

தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு மதகுகள் வழியாக வெளியேறும் நீர் அந்தியூர் மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பாண்டு 5-வது முறையாக அணை நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News