உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்து வாலிபர் திடீர் சாவு

Published On 2023-07-21 12:38 IST   |   Update On 2023-07-21 12:38:00 IST
  • மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் அமராவதி வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (57). இவரது 2-வது மகன் அகிலேஷ் (22). இவர் கேமிங் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்த அகிலேசுக்கு உடல் பருமன் காரணமாக அடிக்கடி மயக்கம் வந்து, பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார். இந்த நிலையில் சம்பவத்தன்று அகிலேசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அகிலேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அகிலேஷ் தந்தை அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News