உள்ளூர் செய்திகள்
கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு
- மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்புடன் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 023 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.