உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

Published On 2023-04-28 09:21 GMT   |   Update On 2023-04-28 09:21 GMT
  • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பி ல் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 038 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 735 பேர் உயிரிழ ந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News