உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2022-08-23 10:06 GMT   |   Update On 2022-08-23 10:06 GMT
  • ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36).

இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் இரவு 7.30 மணியளவில் ஈரோடு-சத்தியமங்கலம் செல்லும் தனியார் பஸ்சில் ஆப்பக்கூடல் பஸ் நிறுத்தத்தில் ஏறி பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

அப்போது ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனே விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி இருசாயி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News