உள்ளூர் செய்திகள்

விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்

Published On 2023-10-12 09:27 GMT   |   Update On 2023-10-12 09:27 GMT
  • இல்லந்தேடி நேரடியாக முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறுவது தொட ர்பாக அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் முன்னோடி வங்கி அலுவ லர்கள் இணைந்து சிறப்பு முகாம்கள் மற்றும் இல்லந்தேடி நேரடியாகவும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் இது வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் விண்ண ப்பிக்கலாம். விவசாயகடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் கடன்க ளுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். விவசாயகடன் அட்டை மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.

மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்க ப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெற வாய்ப்பு உள்ளது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.

விவசாய கடன் அட்டை கடன் பெற விவசாயிகள் தங்களின் நிலஆவணங்கள் (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்), ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலி க்கப்பட்டு விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் கடன் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.

எனவே இது வரை விவசாயகடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம் நடைபெறும் விபரங்கள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குர்களை தொடர்பு கொண்டு விவசாயகடன் அட்டை பெற்று பயன்பெறு மாறு கேட்டுக்கொண்டு ள்ளனர்.

Tags:    

Similar News