உள்ளூர் செய்திகள்

ரூ.90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-04-23 09:24 GMT   |   Update On 2023-04-23 09:24 GMT
  • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
  • ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 53 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News