உள்ளூர் செய்திகள்

ரூ.1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-09-30 09:40 GMT   |   Update On 2023-09-30 09:40 GMT
  • சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது.
  • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது. இதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது.

குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளைம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்னையானது.

முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக் குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News