உள்ளூர் செய்திகள்

ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-05-08 09:36 GMT   |   Update On 2023-05-08 09:36 GMT
  • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
  • சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.

அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

இதில் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை மாடுகளும், 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளும் விற்பனை செய்யப்பட்டது.

2 நாட்கள் கூடிய கால்நடை சந்தையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினார்.

Tags:    

Similar News