உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 27 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு

Published On 2023-07-21 07:16 GMT   |   Update On 2023-07-21 07:16 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் 27 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கபட்டது
  • சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு உதவியாளர்களாக பணியாற்றி வந்த 27 பேர் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 17-ந் தேதி வரை கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த 27 பேருக்கும் சப்- இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து மாவட்ட த்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி பிரபாகரன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், வடிவேல் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், ஆனந்தகுமார், எட்வின் டேவிட், ரவிக்குமார் ஆகியோர் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், செல்வம் புளியம்ப ட்டிக்கும், வில்சன் சத்யராஜ், சரவணகுமார், ஜெக தீஸ்வரன் கோபிசெட்டி பாளை யத்துக்கும், செல்வ ராஜ் சத்தியம ங்கலத்துக்கும், பழனிசாமி, சிவக்குமார் ஈரோடு தாலுகா விற்கும், தாமோதரன் சென்னி மலைக்கும், கந்தசாமி தாளவாடிக்கும், வெங்க டேஷ் ஆப்பக்கூடலுக்கும், மூர்த்தி பவானிக்கும், எஸ்.சிவக்குமார் நம்பியூருக்கும், மேகநாதன் அறச்சலூருக்கும், முருகன் ஈரோடு வடக்கிற்கும், மாதேஸ்வரன் சென்னி மலைக்கும், வாசு கடத்தூரு க்கும், தாயளன் சிவகிரிக்கும், எம்.பழனிசாமி ஈரோடு தெற்கிற்கும், முருகேசன் மற்றும் வெங்கட்ராமன் திங்களூருக்கும், சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News