உள்ளூர் செய்திகள்
பெரியசேமூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
- பெரியசேமூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது
- நாளை மறுநாள் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
ஈரோடு,
மாணிக்கம்பாளையம் மின்பாதையில் நெடுஞ்சாலை த்துறை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்வதால் ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் டீச்சர்ஸ் காலனி, செந்தமிழ் நகர், ஆயப்பாளி, எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர் மற்றும் வேலன்நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.