உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-12-27 15:06 IST   |   Update On 2022-12-27 15:06:00 IST
ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் ஹவுஸ் ரோடு, எஸ்.கே.சி.ரோடு, முத்துவேலப்பாவீதி, மீனாட்சிசுந்தரனார் ரோடு பகுதி, கைகோளன்தோட்டம், வாமலை வீதி, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News