உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அருகே முதியவர் சாவு

Published On 2023-07-16 12:40 IST   |   Update On 2023-07-16 12:40:00 IST
  • பவானிசாகர் அருகே முதியவர் உயிரிழந்தார்
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவரது அண்ணன் துரைசாமி (60). இவர் வாழைக்காய் புரோக்கர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் துரைசாமி நீண்ட காலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் துரைசாமியை உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் துரைசாமியின் சகோதரன் முத்துசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News